Header Logo

ஏனையவை
1,630 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

Jul 14, 2025 - 04:54 PM -

0

1,630 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

புத்தளம் - அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று (13) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி கடற்படையினர் குறித்த பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தப் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளை சோதனையிட்டனர்.

 

இதன்போது, குறித்த காட்டுப்பகுதியில் 39 மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,630 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

 

குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்களால் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

 

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title