Header Logo

ஏனையவை
உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது

Jul 20, 2025 - 03:11 PM -

0

உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில மற்றும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து உயர் சக்தி எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன், சந்தேக நபர்கள் நான்கு பேர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐந்து மோட்டார் சைக்கிள்களும், 50, 45 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்ட உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் சுமார் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதியுடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், நாட்டிற்குள் கொண்டு வர தடை செய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்றும், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் மாத்திரம் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றும், 250 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் போலியான இலக்கத் தகடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக கடல்வழியாக நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தெரிவிக்கின்றனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title