Header Logo

ஏனையவை
உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது

Jul 20, 2025 - 03:11 PM -

0

உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில மற்றும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து உயர் சக்தி எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன், சந்தேக நபர்கள் நான்கு பேர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐந்து மோட்டார் சைக்கிள்களும், 50, 45 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்ட உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் சுமார் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதியுடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், நாட்டிற்குள் கொண்டு வர தடை செய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்றும், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் மாத்திரம் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றும், 250 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் போலியான இலக்கத் தகடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக கடல்வழியாக நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தெரிவிக்கின்றனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title