Header Logo

செய்திகள்
மீன்பிடிக்கச் சென்ற இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

Jul 21, 2025 - 12:31 PM -

0

மீன்பிடிக்கச் சென்ற இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

30 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

குறித்த இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்களும் நீரில் மூழ்குவதைக் கண்ட நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

பின்னர், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய உயிர் காக்கும் பிரிவு மற்றும் இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் வந்து இருவரையும் தேடும் பணியை ஆரம்பித்த நிலையில், ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

காணாமல் போன மற்றொருவரின் உடலைக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title