Header Logo

கிழக்கு
த.தே.கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு

Jul 27, 2025 - 06:54 PM -

0

த.தே.கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான அமரத்துவமடைந்த இரா. சம்பந்தன் அவர்களின் ஒராண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு வவுணதீவில் இன்று (27) இடம்பெற்றது. 

மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும் பிரதேச தமிழரசு கட்சியின் தலைவருமான த.கோபாலப்பிள்ளை தலைமையில் வவுணதீவு சந்தை கட்டிடத் தொகுதி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன் போது இரா. சம்பந்தன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் வைத்து, ஈகைச் சுடர் ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன், இரா.சிறிநாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன், இரா.சிறிநாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி. துரைராசசிங்கம், தமிழரசு கட்சியின் வடக்கு கிழக்குக்கான இளைஞரணியின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன் போன்றோர் அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title