Header Logo

பல்சுவை
ஒரே கல்லூரியில் 800 மாணவ, மாணவிகளுக்கு HIV உறுதி

Jul 30, 2025 - 11:49 AM -

0

ஒரே கல்லூரியில் 800 மாணவ, மாணவிகளுக்கு HIV உறுதி

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எய்ட்ஸ் (HIV/AIDS) தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TSACS) அறிக்கையின்படி, 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த பரவலுக்கு முக்கிய காரணமாக போதைப் பொருள் பயன்பாடு, குறிப்பாக ஒரே ஊசியைப் பகிர்ந்து கொண்டு போதைப் பொருளை செலுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

 

சமீப காலமாக திரிபுராவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

மாநிலத்தில் உள்ள 220 பாடசாலைகள் மற்றும் 24 கல்லூரிகளில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

பெற்றோர்கள், பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியதால், போதைப் பழக்கத்தை கண்டறிவதில் தாமதமாகியுள்ளது.

TSACS அதிகாரிகளின் கூற்றுப்படி, மாணவர்கள் ஒரே ஊசியைப் பயன்படுத்தி போதைப் பொருளை செலுத்தியதே எய்ட்ஸ் தொற்று பரவ முக்கிய காரணமாகும்.

 

இதனால், ஒரே நேரத்தில் 828 மாணவர்களுக்கு தொற்று பரவியுள்ளது. தற்போது 572 மாணவர்கள் உயிருடன் இருக்கின்றனர், ஆனால் 47 பேர் தொற்றின் தீவிரத்தால் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநிலத்தில் உள்ள 164 சுகாதார மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள, திரிபுரா அரசு மற்றும் TSACS பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட 828 மாணவர்களுக்கும் இலவச ஆன்டி - ரெட்ரோவைரல் சிகிச்சை (ART) வழங்கப்பட்டு வருகிறது.

 

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். திரிபுராவில் இருந்து நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் உடனடியாக சொந்த ஊர் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

மத்திய மற்றும் மாநில அரசுகள் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், ஒரே மாநிலத்தில் இத்தனை பெரிய அளவில் நடந்திருக்கும் இந்த சம்பவம் பொதுமக்களை பதற வைத்துள்ளது.

 

முதலமைச்சர் மாணிக் சாஹா, இதற்கு முன்னர் மருத்துவராக பணியாற்றியவர், போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், எய்ட்ஸ் பரவலை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.

 

மேலும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், ஆலோசனை மையங்கள், மற்றும் சோதனை மையங்களை விரிவுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்த சம்பவம் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

 

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் விளைவாக எய்ட்ஸ் தொற்று பரவுவது, கல்வி, சமூக விழிப்புணர்வு, மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

 

திரிபுராவில் நடந்த இந்த துயரம், போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!