Header Logo

பல்சுவை
மாணவிகளிடம் தவறாக நடந்த கராத்தே மாஸ்டர்

Aug 10, 2025 - 05:19 PM -

0

மாணவிகளிடம் தவறாக நடந்த கராத்தே மாஸ்டர்

தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற மாணவிகள் இருவரை, கராத்தே மாஸ்டர் ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் பதிவாகியுள்ளது. 

கடந்த சனிக்கிழமை, குறித்த பயிற்சி வகுப்புக்கு அந்த இரண்டு மாணவிகளும் சென்றுள்ளனர். 

அவர்களிடத்தில் அந்த பயிற்சி வகுப்பை நடத்தும், கராத்தே மாஸ்டரான ஜெயின் மிலோட், 'குட் டச், பேட் டச்' என்றால் என்ன என்பதை விளக்கமளிப்பதாக கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

அங்கு கராத்தே மாஸ்டர், குறித்த மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்ள முற்பட்டுள்ளார். 

இது தொடர்பில் அந்த மாணவிகள் இருவரும் தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிர் பொலிசார் கைது செய்துள்ளனர். 

அவர் மீது, போக்சோ உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். 

குறித்த கராத்தே வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!