Header Logo

கிழக்கு
மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு வியாபாரிகள் கைது

Aug 20, 2025 - 12:24 PM -

0

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு வியாபாரிகள் கைது

மட்டக்களப்புக்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்துக்காக எடுத்து கொண்டு சென்ற இரு வியாபாரிகளை இன்று (20) அதிகாலையில் நகர்பகுதியில் வைத்து 3,700 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் 120,640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்தார். 

பொலிஸ் நிலைய பொலிஸ் கொஸ்தாப்பர் ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவலையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலரத்னவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயசிங்க தலைமையில் சமரபண்டு, ரதன் ஆகிய பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 4.00 மணியளவில் நகர்பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன்போது, கொழும்பிலிருந்து பேருந்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்த போதைப்பொருளைக் கடத்தி வந்து குறித்த வியாபாரிகளிடம் வழங்கிய நிலையில், அதனை வாங்கிக்கொண்டு செல்லும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்து, 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3,200 மில்லிகிராம், மற்றொரு 23 வயதுடையவரிடமிருந்து 4,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்களுடன் கைது செய்தனர். 

மேலும், ஒரு இலட்சத்து இருபதாயிரத்து நாற்பத்து ரூபா (120,640) பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title