Aug 28, 2025 - 06:37 AM -
0
இன்று (28) உண்மையில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினம் ஆகும். இந்த சிறப்பு தினத்தில், சில மங்களகரமான கிரக நிலை மாற்றங்கள் நிகழவுள்ளன. இன்று உண்டாகும் இந்த கிரக நிலை மாற்றங்கள் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பலன்களையும், ஒரு சிலருக்கு எதிர்பாராத பலன்களையும் அளிக்கிறது. அந்த வகையில் இன்று யாருக்கு என்ன பலன் அளிக்கிறது? இந்த பலன்களை கொண்டு இன்றைய தினத்தை எப்படி மகிழ்ச்சியாக கழிப்பது? என்பது குறித்தும் இங்கு நாம் காணலாம்!
மேஷம்
படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற மேஷ ராசியினர் இன்று, தங்கள் தனித்திறமையால் பல்வேறு சாதனைகளை செய்யும் வாய்ப்பு பெறுவார்கள். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை இன்று சந்திப்பார்கள். இன்றைய தினம் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு காணப்படுகிறது; இந்த சந்திப்பின் போது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் பிறக்கும், இந்த சிந்தனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்யும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில், உறவுக்கு உண்மையாக இருங்கள், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுங்கள்.
ரிஷபம்
இந்த வியாழக்கிழமை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு தினமாக இருக்கும். தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் எண்ணற்ற சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும், உங்கள் பகுப்பாய்வு திறன் இன்று உங்களுக்கு உதவி செய்யும்.
நிதி சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். உங்கள் உடன் பிறந்தவர்கள் மற்றும் வாழ்க்கை துணை இந்த நிதி பிரச்சனைகளை சமாளிக்க உதவி செய்வார்கள். இன்றைய தினம் நம்பிக்கையை கைவிடாது, மன தைரியத்துடன் செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சவால்கள் நிறைந்த ஒரு தினமாக இருக்கும். குறிப்பாக பணியிடத்தில் அலைச்சல் நிறைந்து காணப்படும். சக ஊழியர்களின் விடுமுறை உங்கள் பணிகளை அதிகரிக்கும். குறிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
உங்கள் தினசரி இலக்குகளை அடைவதிலும் சிரமங்கள் நீடிக்கும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைக்காக பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிலை உண்டாகும்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்றைய தினம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தன் மனதிற்கு பிடித்த நபரிடம் தனது மனதில் மறைத்து வைத்திருந்த காதல் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பார்கள். அரசியல், சமூக சேவை போன்ற துறையில் இருக்கும் நபர்கள், தங்கள் துறையில் சிறந்து விளங்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் இன்று ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு கொண்டு வரலாம். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இன்றைய தினம் சிறப்பான அனுபவங்களை அளிக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மன அமைதி காணும் ஒரு தினமாக இருக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த ஒரு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் தினமாகவும் இன்று அமையும். அந்த வகையில் சிம்ம ராசியினர் மன அழுத்தங்களை தவிர்த்து ஓர் அளவுக்கு நிம்மதியாக வாழ்வும் தினமாக இன்று அமையும்.
நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும், குடும்ப உறவுகளுடன் சேர்ந்து செய்து வரும் தொழில் போதுமான வருமானமும் கிடைக்கும். வாழ்க்கை உங்கள் விருப்பம் போல் செல்லும் வாய்ப்பு இன்று காணப்படுகிறது. மன அமைதிக்காக இன்று கோவில்களுக்கு செல்லலாம்.
கன்னி
இன்றைய கிரகநிலை கணிப்புகள் கன்னி ராசியினரை எச்சரிக்கின்றது. எதாவது பண விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கிறது. பெரிய தொகைகளை கைமாற்றும் போது அனுபவம் கொண்டவர்களின் அறிவுரை பெறுவது நல்லது. அலுவலகத்தில் அலைச்சல் நிறைந்து காணப்படலாம், சக ஊழியர்கள் உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம்.
பணிகளை சிறப்பாக முடிக்க சக ஊழியர்களின் உதவி அவசியம் என்பதை உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காதல் மன்னர்களாக கருதப்படும் கன்னி ராசியினர்களுக்கு, இன்றைய தினம் திருமணம் கைகூடும் வாய்ப்பும் காணப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியினர் இன்றைய தினம் தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி வைப்பது அவசியம். குறிப்பாக முறையற்ற ஆசைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்களுக்கு உரிமை இல்லாத பொருட்களின் மீது ஆசைப்படுவது கூடாது. இன்றைய தினம் உங்கள் பேச்சாற்றல் மேம்படும் ஒரு தினமாக இருக்கும்; உங்கள் பேச்சாற்றலை பயன்படுத்தி தொழில் வாழ்க்கையில் முன்னேற்றும் காணும் வாய்ப்பு பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க, நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றியில் முடியும். இருப்பினும், சற்று கவனமாக நடந்துக்கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தன லாபத்தை கொண்டு வரும் தினமாக இருக்கும். தன லட்சுமி யோகத்தின் பலன், விருச்சிக ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எண்ணற்ற வாய்ப்புகளை கொண்டு வரும், இந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், உயர் அதிகாரிகளின் கவனத்தை இருப்பீர்கள், கூடுதல் பொறுப்பு பெறுவீர்கள். உங்கள் தனித்திறமைகள் வெளிப்படும், பதவி உயர்வு , ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மன வாழ்க்கையில் மகிழ்ச்சி காணும் ஒரு தினமாக இருக்கும். தங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பை இன்று பெறுவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க முயற்சி செய்வார்கள்.
பணியிடத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும், உங்கள் முன்னேற்றத்தை காண சக ஊழியர்கள் விரும்புவார்கள். சுய தொழில் செய்யும் நபர்கள், தங்கள் செயல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை கண்டு வியப்பார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
மகரம்
மகர ராசியினர் இன்றைய தினம் அதிகம் பயணிக்க வேண்டி இருக்கும். குறிப்பாக, தங்கள் குழந்தைகளின் கல்வி விஷயத்திற்காக அதிகம் பயணிக்க வேண்டி இருக்கும். தொழில் விஷயமாகவும் அதிகம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். இந்த பயணங்கள் பெரும்பாலும் நேர்மறையான முடிவுகளையே அளிக்கும்.
பணியிடத்தில் சிலர் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சதி திட்டங்களை தீட்டலாம், எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தூரத்து உறவுகளிடம் உங்கள் நிதி நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நெருங்கிய நண்பர்களுக்கு கடன் அளிப்பது கூடாது. பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசியினருக்கு புதிய அறிமுகம் கிடைக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். அதாவது, காதல் உறவில் இல்லாதவர்களுக்கு அவர்களின் குணத்திற்கு பொருத்தமான நபர் ஒருவர் இன்று வாழ்க்கை துணையாக கிடைப்பார். பெற்றோர் உதவியுடன் இன்று கிடைக்கும் இந்த அறிமுகம், உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதோடு, உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற தன்னால் முடிந்த உதவிகளையும் செய்யும். சிறு தொழில் செய்யும் நபர்களுக்கு, செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இந்த அறிமுகம், தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்யும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மீனம்
விடாமுயற்சிக்கு பெயர் பெற்ற மீன ராசியினருக்கு இன்றைய தினம் கூடுதல் பொறுப்பு கிடைக்கும் ஒரு தினமாக இருக்கும். குறிப்பாக, பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலும் தனது கடமைகள் அதிகரிக்கும்.
குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். நிதி நிலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது, செலவிற்கு போதுமான வருமானம் கிடைக்கும். போதுமான அளவு கிடைக்கும் வருமானத்தை முறையாக திட்டமிட்டு பயன்படுத்த, எதிர்வரும் நிதி பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.