Sep 9, 2025 - 12:21 PM -
0
மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் கைவிடப்பட்ட பாடசாலை ஒன்றின் காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினர், பொலிஸாருடன் மற்றும் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து, நீதிமன்ற உத்தரவை பெற்று, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அங்கு நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதேவேளை தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
--

