Sep 16, 2025 - 12:41 PM -
0
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
