Header Logo
Mogo Academy

கிழக்கு
இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

Sep 18, 2025 - 02:57 PM -

0

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு
Mobitel inner

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று (18) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் இன்று பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கணேசமூர்த்தி கலாரஞ்சனி ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

324 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுடன், எண்டோஸ்கோபி பிரிவும் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் என வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

இவ் வைத்தியசாலையின் குறைபாடாக திகழ்ந்து வரும் MRI பிரிவு எதிர்வரும் தை மாதம் அளவில் திறந்து வைக்கப்படுமெனவும், சுகாதார துறைசார்ந்த 17 பாரிய திட்டங்களுக்கான அனுமதியினை கடந்த அமைச்சரவை அமர்வில் சமர்பித்து அவற்றிற்கும் நாம் அனுமதியினை பெற்றுள்ளோம், அவற்றின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் கட்டட குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாம் பூர்த்தி செய்து தருவோம் எனவும் இதன் போது அமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார். 

நிகழ்வின் இறுதியில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara