உலகம்
தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய 20 தொழிலாளர்கள்

Sep 24, 2025 - 10:34 AM -

0

தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய 20 தொழிலாளர்கள்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. 

இங்குள்ள சுரங்கங்களில் ஆபத்தான முறையில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்கச் சுரங்கங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. 

அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் தகவல்கள் வௌியாகவில்லை. 

சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோதச் சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

9 நாட்கள் போராடி உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்புக் குழு மீட்டெடுத்தது. இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களில் மீண்டும் தங்கச் சுரங்கம் இடிந்து தொழிலாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05