Header Logo

பல்சுவை
விசாரணையில் திடுக் தகவல்!

Sep 30, 2025 - 05:02 PM -

0

விசாரணையில் திடுக் தகவல்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி சாமியார், கைதில் இருந்து தப்பிப்பதற்காக 40 நாட்களில் 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 

டெல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி மீது புகார் அளிக்கப்பட்டது. அவரை டெல்லி பொலிஸார் கைது செய்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அந்த சாமியார் திரும்பியதும், அப்போதே தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துக்கொண்டு, சுமார் 40 நாட்களுக்கு 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியிருந்தது தெரியவந்தது. குறிப்பாக சிசிடிவி கேமரா இல்லாத சிறிய ஓட்டல்களை தேர்வு செய்து அவர் தங்கியிருக்கிறார். 

இதற்கிடையில் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மதுரா, பிரிந்தாவன் பகுதிகளில் உள்ள மடங்களிலும் அவர் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. கைதில் இருந்த தப்பிக்க அவர் இருப்பிடத்தை மாற்றியபடி இருந்ததும், தொலைபேசி சிக்னலை வைத்து தன்னை டிராக் செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த 3 தொலைபேசிகள், ஐபேட் ஆகியவற்றை அவர் பயன்படுத்தாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அந்த சாமியார் தனது தொலைபேசி, ஐபேட்டின் பாஸ்வேர்ட்டை இதுவரை பொலிஸாரிடம் சொல்லவில்லை என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!