Header Logo

செய்திகள்
எல்.பி.எல் ஆட்ட நிர்ணயம் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு

Oct 3, 2025 - 12:21 PM -

0

எல்.பி.எல் ஆட்ட நிர்ணயம் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு

2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக விளையாட்டு ஊழல் தடுப்புப் பொலிஸ் பிரிவு இன்று (3) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜையான தமீம் ரஹ்மானுக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று (3) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, தமீம் ரஹ்மானும் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

அப்போது, ​​விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளதாக விளையாட்டு ஊழல் தடுப்புப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

அதன்படி, வழக்கைத் தொடங்க குறுகிய காலத்தை வழங்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். 

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!