உலகம்
விசா கட்டணத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு

Oct 5, 2025 - 07:35 AM -

0

 விசா கட்டணத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு

எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த விசாவை பயன்படுத்தி 3 ஆண்டுகளுக்கு அங்கு தங்கி புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியலாம். 

தேவைப்பட்டால் அதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும். 

அதன்படி தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 65 ஆயிரம் விசாக்களை அரசாங்கம் வழங்கி வந்தது. 

அதேபோல் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த 20 ஆயிரம் பேருக்கும் எச்-1பி விசா வழங்கப்பட்டது. 

எனவே சுமார் 13 லட்சம் வெளிநாட்டினர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்-1பி விசா கட்டணத்தை 1 இலட்சம் அமெரிக்க டொலராக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயர்த்தினார். 

அவரது இந்த அறிவிப்பு அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

எனவே ட்ரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05