Header Logo

உலகம்
நுளம்பால் பெருமை இழந்த ஐஸ்லாந்து!

Oct 23, 2025 - 05:21 PM -

0

நுளம்பால் பெருமை இழந்த ஐஸ்லாந்து!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்கள் ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே என்று கருதப்பட்டது. 

கிரகத்தின் மிகக் குளிரான பகுதிகளில் கூட செழித்து வளரும் பூச்சிகள் ஏன் அங்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர். 

இந்த நிலையில், பூமியில் நுளம்புகள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக நீண்ட காலமாக கொண்டாடப்பட்ட ஐஸ்லாந்து, அந்த தனித்துவத்தை இழந்துவிட்டது. 

வேகமாக வெப்பமடைந்து வரும் கிரகத்தின் மற்றொரு காணக்கூடிய விளைவைக் குறிக்கும் வகையில், தீவு நாட்டில் நுளம்புகள் இருப்பதை விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். 

இந்த மாத தொடக்கத்தில் உள்ளூர் பூச்சி ஆர்வலர் பிஜோர்ன் ஹ்ஜால்டசன் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். 

அவர் ரெய்க்ஜாவிக் நகரின் வடமேற்கே உள்ள க்ஜோஸின் பனிப்பாறை பள்ளத்தாக்கில் அந்துப்பூச்சிகளைக் கவனித்தபோது "சிவப்பு ஒயின் ரிப்பனில் ஒரு விசித்திரமான நுளம்பு என்று முதலில் தற்செயலாகக் கண்டார். 

"இது நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று என்பதை உடனடியாக என்னால் உணர முடிந்தது" என்று கூறிய ஹால்டசன் நகைச்சுவையுடன், "கடைசி கோட்டையும் இடிந்து விழுந்தது போல் தெரிகிறது" என்று கூறினார். 

ஹால்டசன் மூன்று மாதிரிகளை சேகரித்தார். இரண்டு பெண் நும்புகள் மற்றும் ஒரு நுளம்பு அவற்றை ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்திற்கு சரிபார்ப்புக்காக அனுப்பினார். 

பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் குலிசெட்டா அன்யுலாட்டா என்ற குளிர் எதிர்ப்பு நுளம்பு இனம் என்பதை உறுதிப்படுத்தினார்.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title