Header Logo

ஏனையவை
மோசடி விவகாரத்திற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை!

Oct 29, 2025 - 05:12 PM -

0

மோசடி விவகாரத்திற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை!

என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த செய்தி தொடர்பில் தெளிவூட்டும் விதமாக ஊடக சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார். 

ஊடக சந்திப்பில் அவர் கருத்த தெரிவிக்கையில், 

2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்ததாகக் கூறுவது பொய், அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை. 

நான் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த நான், எனக்கு தெரிந்த நண்பரின் ஊடாக National security council unit இற்கு நாங்கள் தகவலை வழங்கி இருந்தோம். 

அதனைத் தொடர்ந்து, ஏமாற்ற முயன்ற 11 பே​​​ரையும் கைது செய்தனர். 

இதில் நான் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை, இரண்டு சவுதி நண்பர்கள் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள், நான் ஒரு ஆலோசகர் மட்டுமே நான் ஒரு ஆலோசகராகச் சென்றேன், தொழில் வெற்றிகரமாக இருந்தால், எனக்கு ஒரு கமிஷன் கிடைக்கும், இந்த மோசடி விவகாரத்திற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title