Header Logo
Mogo Academy

கிழக்கு
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்!

Nov 4, 2025 - 10:35 AM -

0

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்!
Mobitel inner

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பெற்றோலியப்பொருட்கள் உட்பட பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு அதிகளவான நிதியை ஒதுக்கீசெய்ய ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார். 

களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

அரசாங்கம் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதுடன் வடகிழக்கில் நடைபெறும் கசிப்பு விற்பனையையும் கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கவேண்டும். 

விலைவாசிகளை குறைக்காமல்,அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தினை அதிகரிக்காமல் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தமுடியாது. 

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்து ஒரு வருடமாகிவிட்டது. ஒரு அரசாங்கம் ஆட்சிக்குவந்து முதலாவது வருடத்தில் செய்யாத விடயத்தினை அதன் பின்னர் வரும்காலங்களில் செய்வது சாத்தியமற்றதாகவேயிருந்து வருகின்றது. 

வரவிருக்கின்ற பாதீட்டின் ஊடாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். 

இலங்கையில் யார் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களுக்கே தெரியாத நிலையில் அவர்களுக்கான அச்சுறுத்தல் என்பது இருப்பதற்கான வாய்ப்பில்லை. யார் அமைச்சர்களாக உள்ளார்கள் என்பதை அவர்கள் எழுதி ஒட்டிக்கொண்டே இனிவரும் காலங்களில் வரவேண்டும். இல்லாது விட்டால் யார் அமைச்சர்கள் என்பதை தெரியாத நிலையே உள்ளது என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara