Nov 15, 2025 - 11:26 AM -
0
பருத்தித்துறை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் உங்களுக்கான விழிப்புணர்வும், வழங்கப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்களுக்கு இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க போதை ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு அமைவாக போதை ஒழிப்பு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் இன்று (15) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
பிராந்திய உப பொலிஸ் அத்தியட்சகர் திலக், பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
--

