இந்தியா
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலி

Nov 24, 2025 - 12:38 PM -

0

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

விபத்து குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். 

அவர்கள் 20-க்கும் மேற்பட்ட நோயாளர் காவு வண்டிகள் மூலம் தென்காசி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05