Header Logo

கிழக்கு
மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

Dec 11, 2025 - 05:20 PM -

0

மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகர், பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறிய சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த வீட்டில், இன்று காலை வழமைபோல நீர்த்தொட்டியை நிரப்புவதற்காக நீர் இறைக்கும் இயந்திரத்தை (Water Pump) இயக்கியபோது, தண்ணீர் நீல நிறத்தில் இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டு, கிணற்றிலிருந்து வாளி மூலம் நீரை எடுத்துச் சோதித்தபோது அது நீல நிறத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் கிணற்றை எட்டிப் பார்த்தபோதும் உள்ளே இருந்த நீர் நீல நிறமாகவே காட்சியளித்ததைக் கண்டு அவர் வியப்படைந்தார். 

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title