Header Logo

கிழக்கு
மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

Dec 11, 2025 - 05:20 PM -

0

மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகர், பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறிய சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த வீட்டில், இன்று காலை வழமைபோல நீர்த்தொட்டியை நிரப்புவதற்காக நீர் இறைக்கும் இயந்திரத்தை (Water Pump) இயக்கியபோது, தண்ணீர் நீல நிறத்தில் இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டு, கிணற்றிலிருந்து வாளி மூலம் நீரை எடுத்துச் சோதித்தபோது அது நீல நிறத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் கிணற்றை எட்டிப் பார்த்தபோதும் உள்ளே இருந்த நீர் நீல நிறமாகவே காட்சியளித்ததைக் கண்டு அவர் வியப்படைந்தார். 

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title