Dec 22, 2025 - 01:16 PM -
0
தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களுடன் கன்னியமாக நடந்துகொள்ளும் பொலிஸார் இந்து மதகுருவினை நடாத்திய விதம் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (21) மாலை மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முற்போக்கான சில விடயங்களை பாராட்டிக்கொண்டிருக்கும்போது பிற்போக்கான, மூர்க்கத்தனமான, கடந்த ஆட்சிக்காலத்தில் நடப்பதுபோன்ற விடயங்கள் நடக்கும்போது அதனை நாங்கள் கண்டிக்காமல் இருக்கமுடியாது.
நேற்று தையிட்டியில் நடைபெற்ற முர்க்கத்தனமான செயற்பாட்டினை, பலாத்காரமான செயற்பாட்டினை நாங்கள் கண்டிக்கின்றோம். காவியுடை தரித்த இந்து படித்த துறவினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர். அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அனுகுகின்றனர் என தெரிவித்தார்.
--

