Header Logo

உலகம்
கானா போதகர் எபோ நோவாவின் புதிய அறிவிப்பால் மக்கள் குழப்பம்!

Dec 25, 2025 - 12:34 PM -

0

கானா போதகர் எபோ நோவாவின் புதிய அறிவிப்பால் மக்கள் குழப்பம்!

இன்று (25) கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியப்போவதாகக் கூறி மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பீதியை கிளப்பிய கானா நாட்டு மதபோதகர் எபோ நோவா (Ebo Noah), தற்போது "உலக அழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இன்று உலகம் அழியாதது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: 

"கடவுள் உலகை அழிக்கத் தீர்மானித்திருந்தார். ஆனால், நான் கடவுளிடம் மண்டியிட்டு, அழுது மன்றாடினேன். மனித குலத்திற்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். எனது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட கடவுள், தனது கோபத்தைத் தணித்துக்கொண்டு உலக அழிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்." 

போதகரின் இந்த முரண்பட்ட அறிவிப்பு, அவரை நம்பிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களை கடும் அதிர்ச்சியிலும், விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது. 

உலகம் அழியப்போகிறது என்ற அச்சத்தில், பலரும் தங்கள் வீடுகள், நிலங்கள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, போதகர் அமைத்திருந்த 'பாதுகாப்பு கப்பல்' பகுதிக்குச் சென்றிருந்தனர். 

தற்போது உலகம் அழியாததாலும், அழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதாலும், சொத்துக்களை இழந்த மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நிர்க்கதியாகி நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. 

இது மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்கான ஒரு திட்டமிட்ட நாடகம் எனப் பகுத்தறிவாளர்களும், ஏனைய மதத் தலைவர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர். 

உலகம் அழியாது என்பது உறுதியானதும், போதகர் பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்புவதற்காகவே "கடவுள் மனமாறிவிட்டார்" என்ற புதிய கதையைக் கூறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் போதகருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்யத் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title