Header Logo

இந்தியா
ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்

Dec 27, 2025 - 08:54 AM -

0

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்

இந்திய மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

திருப்பதியில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, 

இந்தியாவின் மக்கள் தொகை, அறிவு மற்றும் திறமை நமது பாரம்பரிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகளுடன் இணைந்தால், உலகளாவிய சக்தியாக இந்தியா உருவெடுப்பதைத் யாராலும் தடுக்க முடியாது. 

வயதானவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. இந்த விடயத்தில், இன்று நீங்கள் பார்த்தால், இந்தியாவில் இருந்து சுமார் 4 முதல் 5 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். 

இன்று நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகிறது. 

எந்தவொரு ஆடம்பரமான பகுதியும், அமெரிக்காவில் கூட. அமெரிக்கர்களின் சராசரி வருமானம் 55,000 டொலர்கள் முதல் 60,000 டொலர்கள் வரை இருக்கும், அதே நேரத்தில் இந்தியர்கள் சுமார் 135,000 டொலர்கள் சம்பாதிக்கிறார்கள்.இது இரண்டு மடங்கு அதிகம். 

மோகன் பகவத் எப்போதும் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

இது மிகவும் முக்கியம். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் இந்தியாதான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும்' என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

title