Header Logo
Mogo Academy

ஏனையவை
சோழன் உலக சாதனை படைத்த மாணவன்!

Dec 30, 2025 - 06:47 PM -

0

சோழன் உலக சாதனை படைத்த மாணவன்!
Mobitel inner

மட்/தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவன் ரிசோன் ரோபட், பெட்டி வடிவ 100 கூட்டல் மற்றும் 100 கழித்தல் கணக்குகளுக்கு தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சில் ஈடுபட்டார். 

இந்த முயற்சியானது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த இன்பராசா மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ.தனுராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 

நடுவர்கள் முன்னிலையில் மாணவன் ரிசோன் ரோபட் 2 நிமிடங்கள் மற்றும் 10 நொடிகளில் குறிப்பிட்ட 200 கணக்குகளுக்கு தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்ட அருட்தந்தை நவாஜி நவரட்ணம், மற்றும் அருட்தந்தை ஜெ.மாஷல், அருட்தந்தை பி.சுகந்தன், அருட்தந்தை எஸ். ஜெயநிக்சன், அருட்தந்தை ஏ.அன்பு, அருட்சகோதரி எஸ்.தவசீலா மற்றும் கௌரவ விருந்தினர்களான மட்டு/ தாழங்குடா றோமன் க.த.க பாடசாலையின் பதில் அதிபர் ஏ.சுதாகரன், மற்றும் முன்னால் அதிபர் பு.யுவதாஸ் இணைந்து வழங்கிக் கௌரவித்தனர். 

மாணவனின் தந்தை திரு.ரொபர்ட் வரவுற்புரை நிகழ்த்திய அதேவுளை தாயார் ஞானமலர் நன்றியுரை தெரிவித்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மாணவனை உறவினர்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara