Header Logo

இந்தியா
ரயில் நிலையத்தில் பாரிய தீ விபத்து: நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரை!

Jan 4, 2026 - 10:55 AM -

0

 ரயில் நிலையத்தில் பாரிய தீ விபத்து: நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரை!

இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று (04) பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் ஏற்பட்ட இந்தத் தீப்பரவல் காரணமாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமளவான மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த தரிப்பிடத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

ஆரம்பத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஏற்பட்ட தீ, வேகமாகப் பரவி அருகிலிருந்த மரத்தையும் பற்றிக்கொண்டது. இதன் காரணமாக, இரண்டாவது நுழைவாயிலில் அமைந்திருந்த பயணச்சீட்டு விநியோகக் கவுண்டர் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. 

அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் ஒன்றிலும் தீப்பற்றியதாகவும், பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அது அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், தீப்பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!