Header Logo

கிழக்கு
போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது!

Jan 6, 2026 - 12:14 PM -

0

போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது!

வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்களை, 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயினுடன் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வாழைச்சேனையில் இருந்து பேருந்தில் வந்து இறங்கிய குறித்த இரு இளைஞர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் பேத்தாழையைச் சேர்ந்த 24 வயதுடையவர் மற்றும் வாகரையைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title