Jan 14, 2026 - 10:20 AM -
0
மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால், காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரதக் கடவையைக் கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ்) அமைப்பின் உதவியுடன், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் இக்காட்டு யானை கரையைக் கடந்து நீர் வழியாகக் காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து, பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கியும், கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்த யானையே இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.
--

