Header Logo

கிழக்கு
அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

Jan 14, 2026 - 10:20 AM -

0

அச்சுறுத்திய யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால், காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரதக் கடவையைக் கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. 

கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ்) அமைப்பின் உதவியுடன், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் இக்காட்டு யானை கரையைக் கடந்து நீர் வழியாகக் காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கடந்த சில தினங்களாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து, பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கியும், கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்த யானையே இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title