Header Logo

கிழக்கு
இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரி கொழும்பு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜர்!

Jan 16, 2026 - 04:17 PM -

0

இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரி கொழும்பு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜர்!

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார். 

மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். 

இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரணமான இளைஞரின் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்தன. 

இந்த நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று (16) நடைபெற்றது. 

இன்று உயிரிழந்த இளைஞனின் குடும்பம்சார்பில் கொழும்பிலிருந்து வந்த சட்டத்தரணிகளான ஜெயரெட்ணராஜா, சேனக பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். 

பதில் நீதிவானால் இன்று வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இன்று பெற்றோரின் சந்தேகம் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் பதில் நீதவானாக கடமையாற்றுவதன் காரணமாக பிரிதொரு நாளில் இதனை பதிவுசெய்யுமாறு நீதவான் தெரிவித்ததாக சட்டத்தரணி ஜெயரெட்ணராஜா தெரிவித்தார். 

இதேபோன்று கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ள உடற்கூற்று பரிசோதனை அறிக்கை தாமதம் ஆகுவதன் காரணமாகவும் வழக்கானது எதிர்வரும் மாசி மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title