Header Logo

உலகம்
அமெரிக்காவில் வங்கிக்குள் புகுந்த மான்: வெளியேற்றப் போராடிய பொலிஸார்

Jan 24, 2026 - 09:28 AM -

0

அமெரிக்காவில் வங்கிக்குள் புகுந்த மான்: வெளியேற்றப் போராடிய பொலிஸார்

மூடப்பட்டிருந்த வங்கி ஒன்றுக்குள் மான் ஒன்று புகுந்ததால் ஏற்பட்ட பரபரப்பு குறித்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த மானை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பொலிஸார் கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வங்கி ஒன்றிற்குள் கடந்த வங்கி விடுமுறை தினமொன்றில் இந்த மான் புகுந்துள்ளது. 

அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த அந்த விலங்கு, அதற்குள் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வங்கி கட்டிடத்திற்குள் அந்த விலங்கு பதற்றத்துடன் நடந்துகொண்ட விதம் கெமராக்களில் பதிவாகியிருந்தது. 

மூடப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அத்துமீறிய நடமாட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, அவ்விடத்தில் உள்ள அவசர எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. 

இதன் காரணமாக பின்னர் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வருகை தந்தனர். 

அங்கு பொலிஸார் அந்த விலங்கை அவதானித்த பின்னர், அதனை அங்கிருந்து வெளியேற்றி விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். 

இதற்காக அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title