Header Logo

உலகம்
அமெரிக்காவை உலுக்கும் கடும் பனிப்புயல்: 30 பேர் பலி

Jan 27, 2026 - 11:04 PM -

0

அமெரிக்காவை உலுக்கும் கடும் பனிப்புயல்: 30 பேர் பலி

அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

 

இந்தப் பனிப்புயலின் தாக்கத்தினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

 

இதுவரை சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 இதனால் பல விமான நிலையங்களில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

 

மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாகப் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், தரைவழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

 

மக்களின் பாதுகாப்புக் கருதிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் இந்தப் பனிப்புயலால் பல நகரங்கள் உறைபனியில் மூழ்கியுள்ளன.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title