Jan 28, 2026 - 11:56 AM -
0
மட்டக்களப்பு, ஏறாவூர் கடற்பிராந்தியத்தில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போன மீனவரை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--
