Header Logo

கிழக்கு
தமிழரசுக் கட்சி இன்று பதவியாசைக்காகவும் கதிரைப் போட்டிக்காகவுமே இயங்குகிறது

Jan 29, 2026 - 07:20 PM -

0

தமிழரசுக் கட்சி இன்று பதவியாசைக்காகவும் கதிரைப் போட்டிக்காகவுமே இயங்குகிறது

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியானது, இன்று பதவியாசைக்கும் கதிரைப் போட்டிக்குமான ஒரு கட்சியாக மாறியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

களுவாஞ்சிகுடியில் இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை தமிழரசுக்கட்சி இன்று பலவாறாகச் சிதைந்து போயுள்ளது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதை அக் கட்சி முழுமையாக மறந்துவிட்டது. 

மாறாக, தங்களுக்குள் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், தனிப்பட்ட வெற்றிகளை ஈட்டிக்கொள்வதற்குமான முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்" என அவர் சாடினார். 

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதைக் காட்டிலும், உள்வீட்டு அதிகாரப் போட்டிகளுக்கே அக் கட்சி முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தனது கருத்தில் மேலும் வலியுறுத்தினார்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title