Header Logo
Mogo Academy

உலகம்
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு

Feb 4, 2026 - 09:44 PM -

0

நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு
Mobitel inner

நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று (03) மாலை 6:00 மணியளவில் துப்பாக்கிதாரிகள் சிலர் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளுக்கு தீ வைத்துள்ளனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று (04) காலை சுமார் 35 சடலங்கள் மீட்கப்பட்டது என அந்நாட்டு கைமா பிராந்தியத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அகமது தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்றும், பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். 

குறித்த தாக்குதல்களுக்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டியது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara