Feb 7, 2026 - 08:08 AM -
0
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக வரி விதிக்கப்படும் என எச்சரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
எனினும், இந்த ஆணையின் கீழ் விதிக்கப்படக்கூடிய வரி விகிதங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது சுமார் 25% வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் அல்லது சேவைகளை கொள்வனவு செய்யும், இறக்குமதி செய்யும் அல்லது வேறு வழிகளில் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாடும் இந்த ஆணையில் உள்ளடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் அமெரிக்க மற்றும் ஈரானிய சிரேஷ்ட அதிகாரிகள் ஓமானில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

