Feb 13, 2026 - 11:14 AM -
0
சீன மீன்பிடி படகு ஒன்றை ஜப்பானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது சீனாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாகசாகி மாகாணத்திற்கு அப்பால் உள்ள ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலையத்திற்குள் வைத்து இந்தப் படகு இடைமறிக்கப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் படகைப் சோதனைக்கு உட்படுத்துவதற்காக நிறுத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.
எனினும் அந்த கட்டளையையும் மீறி இந்த சீன மீன்பிடி படகு பயணித்துள்ள போதே, அது அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து படகில் இருந்த கெப்டன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
47 வயதான சீன நாட்டவரே படகின் கெப்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன மீன்பிடி படகு ஒன்றை ஜப்பானிய அதிகாரிகள் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.
எவ்வாறாயினும் இது குறித்து சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

