Feb 15, 2026 - 09:44 AM -
0
2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு பங்களாதேஷில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது.
இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
இதன்மூலம் அவர் பங்களாதேஷின் பிரதமராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் பாராளுமன்றின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தம் இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

