Feb 16, 2026 - 05:51 PM -
0
கோலிவுட்டில் அதிக வியாபாரம் கொண்ட நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், ஜனநாயகன் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு பலரது மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் விஜய்யின், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனங்கள் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
அந்தவகையில், பாஜக கட்சியில் தமிழக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கலிடம், விஜய் முதலில் திரிஷா வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் முன்னாள் மேனேஜரான பி.டி. செல்வகுமார் அளித்த பேட்டியில், நான் விஜய்யுடன் இருந்தேன், ஆனால் இப்போது புதிதாக பலர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவரது தாய், தந்தை, மாமா உள்ளிட்டவர்கள் ஓரங்கப்பட்டார்கள். அவரது ரசிகர் மன்ற தலைவராக இருந்தவரும் ஓரங்கப்பட்டிருக்கிறார். அவருக்காக உண்மையாக உழைத்தவர்கள் இப்போது விஜய்யுடன் இல்லை.
விஜய்க்கு முதன்மை தளபதியாக இருந்தேன் நான். ஆனால் என்னை ஓரங்கட்டியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. விஜய் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று எனக்கு எப்படி தெரியும். திரிஷாவிடம் கேளுங்கள். அவங்க சரியா சொல்லுவாங்க. விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என்று சொல்லமுடியாது. சமீபத்தில் சினேகா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போதுகூட நிறைய கூட்டம் கூடியது என்று பி.டி. செல்வகுமார் பேசியிருக்கிறார்.

