உலகம்
திடீர் பனிச்சரிவால் தடம் புரண்ட பயணிகள் ரயில்
Feb 16, 2026 - 11:24 PM -
0
சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது.
பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் சிக்கியது.
இதில் ரெயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. விபத்தின்போது ரயிலில் சுமார் 80 பயணிகள் இருந்தனர்.
தகவல் அறிந்து ஹெலிகொப்டர்களில் வந்த மீட்புப்படையினர் மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
0

