Feb 18, 2026 - 12:32 PM -
0
கலிபோர்னியாவின் காசல் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதைத்தவிர, மேலும் 6 பேர் அங்கு சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை மீட்பதற்காக அந்நாட்டு அதிகாரிகளால் 46 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், நிலவும் மோசமான காலநிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்பகுதியில் காலநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதுடன், வரும் நாட்களில் பனிப்புயல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

