Feb 21, 2026 - 11:08 PM -
0
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், மாற்று மதம் மற்றும் சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதற்காக நான்கு மாதக் கர்ப்பிணியான தனது சொந்தத் தங்கையை அண்ணன் கோடாரியால் வெட்டிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சித்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான மீனாட்சி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், தனது குடும்பத்தின் கடுமையான எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்தின் பின்னர் இந்தத் தம்பதியினர் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை (18) கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மீனாட்சி தனது கணவருடன் சென்றுள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட அவரது அண்ணனான மஞ்சுநாத் (35 வயது), குறித்த விழா நடைபெறும் இடத்திற்குச் சென்று, மீனாட்சியைத் திடீரெனக் கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதன்போது, அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். இதனால் அவர் பெரும் உயிர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறான 'கௌரவக் கொலைகள்' மற்றும் தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே, கர்நாடக மாநில அரசானது அண்மையில் "ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை/விழிப்புணர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. எனினும், இவ்வாறான நிலையிலும் பட்டப்பகலில் திருமண மண்டபத்தில் வைத்து இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை அப்பகுதிப் பொலிஸார் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

