Header Logo

உலகம்
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவு!

Feb 23, 2026 - 02:10 PM -

0

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவு!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், நிகோல்ஸ்கி நகரில் இருந்து தென்மேற்கே 93 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. 

19.9 கி.மீ கடல் ஆழத்தில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதனையும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பிறப்பிக்கவில்லை. 

இதனால், பொருளிழப்புகளோ, கட்டிட இடிபாடுகளோ அல்லது யாருக்கும் பெரிய பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. 

எனினும், இதன்பின்னர் நிகோல்ஸ்கி நகரில் இருந்து 85 கி.மீ. தென்மேற்கே மற்றொரு நில அதிர்வும் ஏற்பட்டது. 

அது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இதேபோன்று தெற்கு கலிபோர்னியா கடலோரம் பசுபிக் பெருங்கடலில் 3.5 அளவிலான மற்றொரு நிலஅதிர்வும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title