Header Logo

உலகம்
இனி கேரளா இல்லை கேரளம்!

Feb 24, 2026 - 08:29 PM -

0

இனி கேரளா இல்லை கேரளம்!

இந்திய மத்திய அரசு, கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு இன்று (24) ஒப்புதல் அளித்துள்ளது. 

 

2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி கேரள மாநில சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

எதிர்வரும் ஏப்ரல் - மே மாதங்களில் கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இந்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர், இந்திய அரசியலமைப்பின் 3 ஆவது பிரிவின் கீழ், இந்தியக் குடியரசுத் தலைவரால் "கேரளா (பெயர் மாற்ற) சட்டமூலம்- 2026" கேரள மாநில சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும். 

 

அங்கு மாநில சட்டப்பேரவையின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

 

மலையாள மொழியில் இந்த மாநிலம் 'கேரளம்' என்றே அழைக்கப்படுவதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

 

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் மக்களுக்காக 'கேரளம்' என்ற பெயரில் ஒருங்கிணைந்த மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்தத் திருத்தத்தின் மூலம், இந்திய அரசியலமைப்பின் 8 ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இனிமேல் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title