Header Logo

மலையகம்
வறுமையைக் கடந்து யோகாவில் மிளிரும் 11 வயது சிறுமி!

Feb 25, 2026 - 11:10 AM -

0

வறுமையைக் கடந்து யோகாவில் மிளிரும் 11 வயது சிறுமி!


ஆசிரியர் இன்றி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் கலைகளைத் தாமாகவே கற்று, அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வரும் மாணவி ஒருவரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை அல்டோரா போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த இவர், அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயதுடைய சசிகுமார் திருசிகா ஆவார். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து, அதுபோலவே தானும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் யாருடைய துணையுமின்றி யோகா கலையைப் பயின்றதாக அம்மாணவி தெரிவித்தார். தனது திறமையை பல்வேறு மேடைகளில் நிகழ்த்திக் காட்டியதன் மூலம், பல நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களையும், பதக்கங்களையும், நினைவுச் சின்னங்களையும் அவர் பெற்றுள்ளார். இருப்பினும், வறுமை காரணமாக இந்த உயரிய கலையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தொடர்ச்சியாகக் கற்று இதனைப் பலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பல வருடப் பயிற்சியின் பின்னர், யோகா கலையில் கடினமான சாகச ஆசனங்களையும், அதன் மூலம் தான் புதிதாக உருவாக்கிய நடனங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டி வருகிறார். எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில், தனது வீட்டில் உள்ள ஒரு மெத்தையை (Mattress) மட்டுமே பயன்படுத்தி அவர் இந்தச் சாகசங்களைப் பயின்றுள்ளார் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title