Header Logo

மலையகம்
வறுமையைக் கடந்து யோகாவில் மிளிரும் 11 வயது சிறுமி!

Feb 25, 2026 - 11:10 AM -

0

வறுமையைக் கடந்து யோகாவில் மிளிரும் 11 வயது சிறுமி!


ஆசிரியர் இன்றி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் கலைகளைத் தாமாகவே கற்று, அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வரும் மாணவி ஒருவரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை அல்டோரா போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த இவர், அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயதுடைய சசிகுமார் திருசிகா ஆவார். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து, அதுபோலவே தானும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் யாருடைய துணையுமின்றி யோகா கலையைப் பயின்றதாக அம்மாணவி தெரிவித்தார். தனது திறமையை பல்வேறு மேடைகளில் நிகழ்த்திக் காட்டியதன் மூலம், பல நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களையும், பதக்கங்களையும், நினைவுச் சின்னங்களையும் அவர் பெற்றுள்ளார். இருப்பினும், வறுமை காரணமாக இந்த உயரிய கலையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தொடர்ச்சியாகக் கற்று இதனைப் பலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பல வருடப் பயிற்சியின் பின்னர், யோகா கலையில் கடினமான சாகச ஆசனங்களையும், அதன் மூலம் தான் புதிதாக உருவாக்கிய நடனங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டி வருகிறார். எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில், தனது வீட்டில் உள்ள ஒரு மெத்தையை (Mattress) மட்டுமே பயன்படுத்தி அவர் இந்தச் சாகசங்களைப் பயின்றுள்ளார் என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!