Header Logo

உலகம்
அமெரிக்க படகு மீது கியூபா படையினர் துப்பாக்கிச் சூடு - நால்வர் பலி

Feb 26, 2026 - 10:10 AM -

0

அமெரிக்க படகு மீது கியூபா படையினர் துப்பாக்கிச் சூடு - நால்வர் பலி

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றின் மூலம் கியூபா கடல் எல்லைக்குள் நுழைந்தவர்கள் மீது அந்நாட்டு கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

 

இச்சம்பவத்தில் மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தீவொன்றுக்கு அருகில் அதிவேகப் படகில் வந்தவர்கள் மீது தமது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ கருத்துத் தெரிவிக்கையில், படகில் இருந்த நபர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title