Header Logo

மலையகம்
ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

Feb 26, 2026 - 10:31 AM -

0

ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம புகையிரத பாதைக்கு அருகாமையிலுள்ள வன பாதுகாப்புப் பகுதிக்கு, நேற்று (25) மாலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இத்தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

இந்தத் தீ விபத்தின் காரணமாக இலங்கைக்குக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மேலும், வறட்சிக் காலங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதால் நீரூற்றுகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

காடுகள் அழிவதனால் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரக்கூடும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்லது பொழுதுபோக்குக்காகச் சமூக விரோதிகள் இவ்வாறான தீ வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இயற்கையை அழிக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து பலத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title