Header Logo

மலையகம்
ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

Feb 26, 2026 - 10:31 AM -

0

ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம புகையிரத பாதைக்கு அருகாமையிலுள்ள வன பாதுகாப்புப் பகுதிக்கு, நேற்று (25) மாலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இத்தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

இந்தத் தீ விபத்தின் காரணமாக இலங்கைக்குக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மேலும், வறட்சிக் காலங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதால் நீரூற்றுகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

காடுகள் அழிவதனால் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரக்கூடும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்லது பொழுதுபோக்குக்காகச் சமூக விரோதிகள் இவ்வாறான தீ வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இயற்கையை அழிக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து பலத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title