Feb 27, 2026 - 10:08 AM -
0
பாகிஸ்தானின் தாக்குதல்களில் இதுவரை 27 ஆப்கான் தலிபான் இராணுவ நிலைகளை அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் மொஸரப் சைடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் ஒன்பது ஆப்கான் இராணுவ நிலைகளை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 80-க்கும் மேற்பட்ட தாங்கிகள், பீரங்கிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வாகனங்கள் ஆகியவற்றைத் தமது படைகள் அழித்துள்ளதாக அவர் கூறினார்.
ஆக்கிரமிப்பிற்கு பாகிஸ்தானின் உடனடியான மற்றும் பயனுள்ள பதில் நடவடிக்கையா இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று இரவு 19 பாகிஸ்தான் இராணுவ நிலைகளையும் இரண்டு தளங்களையும் கைப்பற்றியதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்தம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
எனினம் அதனை பாகிஸ்தான் தரப்பினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

