Header Logo

மலையகம்
நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

Feb 27, 2026 - 10:43 AM -

0

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

தலவாக்கலை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகையைத் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது. 

திருடப்பட்ட நகையைச் சந்தேக நபர் அருகில் உள்ள வேறொரு நகைக்கடையில் அடகு வைத்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எமது செயதியாளர் தெரிவித்தார். 

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 

தலவாக்கலை நகரில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக உள்ள நகை கடையொன்றில் நகை வாங்குவது போல் பாவனை செய்து தங்க மோதிரம் ஒ;னிறனை மிகவும் நூதன முறைய களவாடி கடை உரிமையாளரை திசை திருப்பிவிட்டு பணப்பையினை எடுப்பது போல் பணத்தினை எடுத்து மோதிரத்தினை பணத்துடன் சுருட்டி தனது காட்சட்டை பக்கட்டில் வைக்கும் காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. 

தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு நகை வாங்குவது போல் வந்த நபர், உரிமையாளரைத் திசை திருப்பி நூதன முறையில் தங்க மோதிரம் ஒன்றைத் திருடியுள்ளார். தனது பணப்பையை எடுப்பது போல் பாசாங்கு செய்து, மோதிரத்தைப் பணத்துடன் சேர்த்துச் சுருட்டித் தனது காற்சட்டைப் பையில் (Pocket) வைத்துள்ளார். இக்காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. 

சிறிது நேரத்தின் பின் மோதிரம் ஒன்று குறைவாக இருப்பதைக் கவனித்த உரிமையாளரின் மனைவி, சிசிடிவி காட்சிகளைச் சோதித்தபோது நகை திருடப்பட்டதை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டபோது, குறித்த நபர் கடைக்கு எதிரே உள்ள வேறொரு கடையில் இருப்பதைக் கண்டு அவரை மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பொலிஸார் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட மோதிரம் அருகிலிருந்த அடகு கடை ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரின் சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள மற்றொரு நகைக்கடையிலும் இதேபோன்று நூதன முறையில் தங்க நகை திருடப்பட்டிருந்தது. அக்காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ள போதிலும், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!