Header Logo
Mogo Academy

மலையகம்
கொத்மலையில் கூடாரங்களில் வாழ்ந்துவரும் மக்கள்!

Mar 1, 2026 - 11:52 AM -

0

கொத்மலையில் கூடாரங்களில் வாழ்ந்துவரும் மக்கள்!
Mobitel inner

'டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை - ரம்பொடை, வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். 

மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களாக அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். 

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், 

'டித்வா' புயல் தாக்கி தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிறகு, சுமார் ஒரு மாதமாக பொது இடங்களிலும், தோட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வசித்து வந்தோம். பின்னர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 25 குடும்பங்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தற்காலிக கூடாரங்களைத் தயாரித்து தங்க வைத்துள்ளனர். 

எனினும் தற்போது இடைக்கிடையே மழை பெய்து வருகிறது அத்துடன், அதிக காற்று வீசும் போதும் கூடாரங்களில் தொடர்ந்து தங்குவது சாத்தியமற்றது என்றும், தற்போதைய அரசாங்கம் புதிய வீடுகளை கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர். 

அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

வரும் நாட்களில் கொத்மலை பகுதியில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் அபாயம் இருப்பதால். மீண்டும் ஒரு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தமக்கான நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமலும் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமக்கு விடிவையும், உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara