ஜோதிடம்
அடுத்த 30 நாட்கள் மிகவும் ஆபத்தானது!

Mar 2, 2026 - 05:07 PM -

0

அடுத்த 30 நாட்கள் மிகவும் ஆபத்தானது!

இந்த ஆண்டில் உருவாகும் சிறப்பு யோகங்களில் அங்காரக யோகமும் ஒன்று. பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்திருக்கும் காலமே அங்காரக யோகம். இந்த காலம் மிகவும் ஆபத்தானது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் வேகத்தைக் குறிக்கும் கிரகமாவார். ராகு நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் சேரும்போது அங்காரக யோகம் உருவாகிறது. 2026 இல் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை இந்த யோகம் கும்ப ராசியில் நீடிக்கும். குறிப்பாக மார்ச் 13 - 14 திகதிகளில் சதய நட்சத்திரத்தில் இந்த சேர்க்கை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் முடிவெடுப்பதில் கவனம் தேவை. 

அங்காரக யோகத்தின் போது முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. குறிப்பாக வேலை மாறுவது, புதிய தொழில் தொடங்குவது, பெரிய முதலீடுகள் செய்வது, திருமண முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் பிற்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். செவ்வாய் மற்றும் ராகுவின் தாக்கத்தால் கோபத்தில் முடிவெடுக்கும் சூழல் ஏற்படலாம். 

மார்ச் 9 முதல் மார்ச் 22 வரையிலான காலம் சற்று ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சாலை அல்லது விமானப் பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அவசியமெனில், முழுமையான திட்டமிடலுடன் செல்ல வேண்டும். சிறிய பயணங்கள் மட்டுமே பாதுகாப்பானது. செவ்வாய் வாகனங்களையும், ராகு எதிர்பாராத நிகழ்வுகளையும் குறிப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

இந்த நேரத்தில் குடும்பம் அல்லது பணியிடத்தில் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மேஷம், விருச்சிகம், கும்ப ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிறிய விஷயங்கள் பெரிய பிரச்சனைகளாக மாற வாய்ப்புள்ளது. தவறான புரிதல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதை அமைதியாக வைத்திருக்க தியானம், பிராணாயாமம் செய்வது நல்லது. 

அங்காரக யோகத்தின் போது நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பங்குச்சந்தை, முதலீடுகள், பெரிய சொத்து வாங்குவது போன்றவற்றில் இருமுறை யோசிக்க வேண்டும். இந்த காலத்தில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. ஏப்ரல் 2-க்கு பிறகு முதலீடுகள் குறித்து முடிவெடுப்பது நல்லது. கோபமான செயல்கள், சண்டைகள் அல்லது பழிவாங்கும் உணர்வுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் ஹனுமான் மந்திரங்களை பாராயணம் செய்வது மன அமைதியைத் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05